செடிக்கு தண்ணீர் ஊற்றிய லாரி மீது கார் மோதல் - கேரளாவை சேர்ந்த பெண் உள்பட 2 பேர் உயிரிழப்பு

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் நடுவே உள்ள, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிய டேங்கர் லாரி மீது கார் ஒன்று, பயங்கரமாக மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
செடிக்கு தண்ணீர் ஊற்றிய லாரி மீது கார் மோதல் - கேரளாவை சேர்ந்த பெண் உள்பட 2 பேர் உயிரிழப்பு
x
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் நடுவே உள்ள, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிய டேங்கர் லாரி மீது கார் ஒன்று, பயங்கரமாக மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். கேரளாவை சேர்ந்த லித்மெத் என்பவர், ஆஸ்திரேலியாவில் உள்ள தனது கணவரை பார்ப்பதற்காக, மாமனார் ஜோஸ் மற்றும் உறவினர் ஜெபஸ்டின் ஆகியோருடன், கேரளாவில் இருந்து காரில் சென்னை நோக்கி வந்துள்ளார். சங்கனாச்சேரியைச் சேர்ந்த வில்சன்,  காரை ஓட்டி வந்துள்ளார். விழுப்புரம் அருகே ஜானகிபுரம் என்ற இடத்தில் வந்த போது, நான்கு வழிச்சாலையின் நடுவே உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த டேங்கர் லாரி மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் ஓட்டுநர் வில்சன் உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்ற 3 பேரும், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு 

Next Story

மேலும் செய்திகள்