ஒட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து புதுச்சேரி முதல்வர் பிரசாரம்

ஒட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பிரசாரம் மேற்கொண்டார்.
ஒட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து புதுச்சேரி முதல்வர் பிரசாரம்
x
ஒட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பிரசாரம் மேற்கொண்டார். புதிய முத்தூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், ஆட்சிக்கு வந்ததும் பல திட்டங்களை நிறைவேற்றுவதாக கூறிய மோடி, எதுவும் செய்யவில்லை என குற்றஞ்சாட்டினார். மோடி ஆட்சியில் தலித், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள் என அனைவருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளதாக கூறினார். ஹைட்ரோ கார்பன் எடுக்கும் அனுமதிக்கு எதிராக புதுச்சேரி முதல்வரான தான், அறிக்கை அளித்துள்ளதாகவும், தமிழக அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை எனவும் விமர்சித்தார். மேலும், தமிழகத்துக்கு நல்ல முதல்வராக ஸ்டாலின் இருப்பார் எனவும், அவரால் தான் நல்லாட்சி தர முடியும் எனவும் நாராயணசாமி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்