விருதுநகரில் போலீசாருக்கு சவால் விட்ட 3 குற்றவாளிகள் : வாகன சோதனையின் போது சிக்கினர்

விருதுநகரில் முடிந்தால் பிடித்து பாருங்கள் என்று காவல்துறையினருக்கே சாவால் விட்ட மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகரில் போலீசாருக்கு சவால் விட்ட 3 குற்றவாளிகள் : வாகன சோதனையின் போது சிக்கினர்
x
விருதுநகரில் முடிந்தால் பிடித்து பாருங்கள் என்று காவல்துறையினருக்கே சாவால் விட்ட மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட விக்னேஸ்வரன், அஜித் மற்றும் முத்தமிழ்செல்வன் ஆகிய மூவரை பிடிக்க, அருப்புக்கோட்டை தாலுகா காவல்துறையினர் சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், மதுரை தூத்துக்குடி சாலையில் நடைபெற்ற வாகன சோதனையின் போது,   இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்ற மூவர் , போலீசாரை கத்தி, வாள் கொண்டு தாக்க முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்ததில், அவர்கள் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் என்பது உறுதியானது. இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்