தனியார் இன்டர்நெட் சென்டரில் ரூ.5 லட்சம் கொள்ளை : சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் சிக்கிய ஊழியர்

நாமக்கல்லில் தனியார் இன்டர்நெட் சென்டரில் ரூபாய் 5 லட்ச ரூபாயை கொள்ளையடித்து சென்ற, சென்டர் ஊழியரை சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் போலீசார் கைது செய்தனர்.
தனியார் இன்டர்நெட் சென்டரில் ரூ.5 லட்சம் கொள்ளை : சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் சிக்கிய ஊழியர்
x
நாமக்கல் மணிக்கூண்டு அருகே ராஜகோபால் என்பவர் நடத்தி வரும் இன்டர்நெட் சென்டரில் கடந்த 13-ம் தேதி இரவு 5 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்த நாமக்கல் போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையனை தீவிரமாக தேடி வந்தனர். இன்டர்நெட் சென்டரில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் சென்டரில்  வேலை பார்த்து வந்த உதயா என்பவர் கருப்பு நிற பர்தா அணிந்து வந்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து உதயாவை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 5 லட்ச ரூபாயை மீட்டனர்.  இவ்வழக்கில் விரைவாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த  நாமக்கல் காவல் ஆய்வாளர் பெரியசாமி தலைமையிலான தனிப்படை போலீசாரை நாமக்கல் எஸ்.பி பாராட்டி வெகுமதி வழங்கினார்.  

Next Story

மேலும் செய்திகள்