தவறவிட்ட நகை பை : ஆட்டோவில் வந்து திருடிய நபர்கள்

சென்னை அண்ணாசாலையில் தவற விட்ட நகை பையை சி.சி.டிவி காட்சிகளை வைத்து சென்னை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
தவறவிட்ட நகை பை : ஆட்டோவில் வந்து திருடிய நபர்கள்
x
சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீரான் சாகிப் தெருவை சேர்ந்தவர் பிரியா. கடந்த 4ஆம் தேதி அவரும், அவரின் மாமியாரும் அண்ணா சாலை வழியாக ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் பொழுது தனது கையில் வைத்திருந்த நகைகளை தவறவிட்டுள்ளார். நீண்ட நேரம் தேடிப்பார்த்தும் நகை பை கிடைக்காததால் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் கொடுத்த இரவில் இருந்து சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு நகை பையை போலீசார் தேடி வந்துள்ளனர். தாராப்பூர் டவர்ஸ் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை சோதனை செய்தபோது அப்பகுதியாக வந்த சரக்கு ஆட்டோவில்  இருந்த நபர் ஒருவர் கீழே இறங்கி சாலையில் கிடந்த நகை பையை எடுத்துச் சென்றது பதிவாகியிருந்தது. தொடர்ந்து ஆட்டோ செல்லும் வழியை ஆய்வு செய்ததில் கொத்தவால் சாவடியில் அந்த ஆட்டோ நின்றதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து ஆட்டோ டிரைவர் பார்த்தசாரதி மற்றும் அவருடன் இருந்த கலைச்செல்வன் ஆகியோரிடம் விசாரணை செய்ததில் அவர்கள் இருவரும் நகையை எடுத்து சென்றது உறுதியானது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 19 சவரன் நகையை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்