தெருவோர குழந்தைகளுக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தென்னிந்திய அணி வெற்றி - ஸ்டாலின் வாழ்த்து

தெருவோர குழந்தைகளுக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை தென்னிந்திய அணி வீழ்த்தியதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தெருவோர குழந்தைகளுக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தென்னிந்திய அணி வெற்றி - ஸ்டாலின் வாழ்த்து
x
பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள பெருமை மிகு லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற தெருவோர குழந்தைகளுக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை தென்னிந்திய அணி வீழ்த்தியதற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது முகநூல் பக்கத்தில், தென்னிந்திய அணியில் சென்னையை சேர்ந்த சூர்யபிரகாஷ், பால்ராஜ், நாகலட்சுமி,மோனிஷா ஆகிய நால்வரும் பங்கேற்று வெற்றிக்கு வித்திட்டிருப்பது பாராட்டுக்குரியது என்றும் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தெருவோர குழந்தைகளின் உரிமைகள் பாதுகாக்கப்படவும் அவர்களின் திறமைகள் மிளிர்ந்து இத்தகைய சாதனைகள் படைக்கவும் தி.மு.க என்றும் துணை நிற்கும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்