பேனா, பேப்பர் 17 - சி படிவத்திற்கு அனுமதி வேண்டும் - தமிழக தேர்தல் ஆணையத்திடம் திமுக கோரிக்கை மனு

பேனா, பேப்பர், 17 சி படிவம் போன்றவற்றை கொண்டு வர அனுமதி வழங்க வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையத்திடம் திமுக வேண்டுகோள் விடுத்துள்ளது.
பேனா, பேப்பர் 17 - சி படிவத்திற்கு அனுமதி வேண்டும் - தமிழக தேர்தல் ஆணையத்திடம் திமுக கோரிக்கை மனு
x
வரும் 23ஆம் தேதி நடத்தப்பட உள்ள வாக்கு எண்ணிக்கைக்கு, கட்சிகளின் முகவர்கள், குறித்துக் கொள்ள பேனா, பேப்பர், 17 சி படிவம் போன்றவற்றை கொண்டு வர அனுமதி வழங்க வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையத்திடம் திமுக வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து திமுக அளித்துள்ள மனுவில், தேர்தல் நாளின் போது, கட்சி முகவர்களுக்கு பேப்பர், பேனா, உள்ளிட்டவை கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் செல்போனுக்கு மட்டுமே அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  எனவே, தமிழக தேர்தல் ஆணையம், வாக்கு எண்ணும் மையங்களில், பேப்பர், பேனா கொண்டு வர, அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்