மறுவாக்குப்பதிவில் கூடுதல் பாதுகாப்பு தேவை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் காங். மனு

மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மறுவாக்குப்பதிவில் கூடுதல் பாதுகாப்பு தேவை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் காங். மனு
x
மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், மறுவாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நேர்மையான முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய போதிய அளவில் காவல்துறையினரை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்  என்றும், தேர்தல் பார்வையாளர்களை நியமிக்க  வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும்,  பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்