தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 296 உயர்வு
ஆபரண தங்கத்தின் விலை சென்னையில் ஒரே நாளில் சவரனுக்கு 296 ரூபாய் அதிகரித்துள்ளது.
ஆபரண தங்கத்தின் விலை சென்னையில் ஒரே நாளில் சவரனுக்கு 296 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் 3 ஆயிரத்து 54 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று 3 ஆயிரத்து 91 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கத்தின் விலை 24 ஆயிரத்து 432 ரூபாயிலிருந்து, 24 ஆயிரத்து 728 ரூபாயாக அதிகரித்துள்ளது. மும்பை, டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் விலை உயராத நிலையில் சென்னையில் மட்டும் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story