தண்ணீர் கேட்டு மக்கள் சாலைமறியல் : பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில், குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தண்ணீர் கேட்டு மக்கள் சாலைமறியல் : பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
x
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில், குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  2 வாரங்களாக தண்ணீர் வரவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர். தகவல் அறிந்து அங்கு வந்த வட்டார வளர்ச்சி அதிகாரி, நாளொன்றுக்கு 3 மணி நேரம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து, மறியல் கைவிடப்பட்டது. போராட்டத்தின் போது, பெண் ஒருவர், திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் தண்ணீர் தெளித்து, அவரை வீட்டிற்கு அழைத்து சென்றனர். 


Next Story

மேலும் செய்திகள்