அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை : பெண்களுக்கு இலவச கராத்தே பயிற்சி

அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கருத்தில் கொண்டு , ராமநாதபுரம் மாவட்டம் பரமகுடியில் மாணவிகளுக்கு கல்லூரி மாணவர் ஒருவர் இலவச கராத்தே பயிற்சி அளித்து வருகிறார்.
அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை : பெண்களுக்கு இலவச கராத்தே பயிற்சி
x
அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கருத்தில் கொண்டு , ராமநாதபுரம் மாவட்டம் பரமகுடியில் மாணவிகளுக்கு கல்லூரி மாணவர் ஒருவர் இலவச கராத்தே பயிற்சி அளித்து வருகிறார். மணிகண்ட பிரபு என்ற அந்த மாணவர், கல்லூரியில் இறுதி ஆண்டு பயின்று வருகிறார். கராத்தேவில் பிளாக் பெல்ட் வென்றுள்ள இவர், தற்போது பள்ளி மாணவிகளுக்கு இலவசமாக கராத்தே பயிற்சி கற்றுக்கொடுத்து வருகிறார். கராத்தே பயிற்சிக்கு வரும் மாணவிகளுக்கு தனது சொந்த செலவில் டீ, காபி, பிஸ்கட் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்குகிறார். கோடை விடுமுறை காலத்தில் பல மாணவிகள் ஆர்வமாக கராத்தே கற்று வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்