இரு தரப்பினர் இடையே மோதல் - பதற்றம்

திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீடுகள் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரு தரப்பினர் இடையே மோதல் - பதற்றம்
x
திருச்சி தொட்டியத்தில் தோளூர்பட்டி மாரியம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்றுள்ளது. இதில் உண்டியலில் சேர்ந்த பணத்தை எடுத்து செல்லுமாறு அறநிலையத்துறையினருக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் புகார் மனு அனுப்பி உள்ளதாக தெரிகிறது. இதையடுத்து உண்டியல் பணத்தை எடுத்துச் செல்ல அறநிலையதுறையினர் வந்துள்ளனர். ஆனால் இது பொது கோவில் என்பதால் பணத்தை எடுத்துச் செல்லக் கூடாது என கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அறநிலைய துறையினர் அங்கிருந்து திரும்பி சென்றுள்ளனர். இந்த நிலையில் தோளூர்பட்டியில் ஒரு சமூகத்தினரின் வீடுகளின் மேற்கூரைகள், மற்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஆகியவை உடைத்து நொறுக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பணிக்காக போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்