ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் : மதுபாட்டிலால் தாக்குதல் - ஒருவர் காயம்

ஒசூர் குருப்பட்டியை சேர்ந்த முருகேஷ் மற்றும் அவரது நண்பரான வசிம் ஆகிய இருவரும் சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டி குறித்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் : மதுபாட்டிலால் தாக்குதல் - ஒருவர் காயம்
x
ஒசூர்  குருப்பட்டியை சேர்ந்த முருகேஷ் மற்றும் அவரது நண்பரான வசிம் ஆகிய இருவரும் சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டி குறித்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் வசிமிடம் முருகேஷ்  தோல்வியுற்றதால் வசிம்க்கு முருகேஷ் 10 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து வசிம் தொடர்ந்து முருகேஷிடம் பணம் கேட்டு வற்புறுத்தி வந்த நிலையில், இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாய்த்தகறாறு ஏற்பட்டுள்ளது. அப்போது வசிம், முருகேசனை மதுபாட்டிலால் தாக்கியுள்ளார். இதில் தலை மற்றும் கை உள்ளிட்ட இடங்களில் காயமடைந்த முருகேஷ் ஓசூர் அரசு மருத்துவ சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து முருகேஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்