தந்தி டி.வி. செய்தியால் உடனடி நடவடிக்கை : குடிநீர் கொண்டு வர புதிய பைப்புகள் அமைக்கும் பணி தீவிரம்

தஞ்சை மாவட்டம் ராயமுண்டான்பட்டி கிராமத்தில் குடிநீருக்காக பொது மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
x
தஞ்சை மாவட்டம்  ராயமுண்டான்பட்டி கிராமத்தில் குடிநீருக்காக பொது மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று  குடிநீர் கொண்டு  வர வேண்டியுள்ளதாக  கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர். இது குறித்த செய்தி  தந்தி டிவியில் ஒளிப்பரப்பானது. இதையடுத்து அக்கிராமத்திற்கு  குடிநீர் கொண்டு வர புதிய பைப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பொக்கலின் இயந்திரம் மூலம் பைப்புகள் அமைக்கும் பணிகளில்  குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களும்  ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் தங்களுக்கு விரைவில் குடிநீர் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ள கிராம மக்கள் தந்தி டிவிக்கு நன்றி தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்