நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே கணவரை கல்லால் அடித்து கொன்ற மனைவி

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சதீஷ்குமார் என்பவரை கல்லால் அடித்து கத்தியால் குத்தி கொலை செய்ததாக அவரது மனைவி மற்றும் மாமனாரை போலீசார் கைது செய்தனர்.
நாகை மாவட்டம்  தரங்கம்பாடி அருகே கணவரை கல்லால் அடித்து கொன்ற மனைவி
x
நாகை மாவட்டம்  தரங்கம்பாடி அருகே  சதீஷ்குமார் என்பவரை கல்லால் அடித்து, கத்தியால் குத்தி கொலை செய்ததாக அவரது மனைவி மற்றும்  மாமனாரை போலீசார் கைது செய்தனர். தலைச்சங்காடு கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமாருக்கும் , அப்பராசபுத்தூர் கிராமத்தை சேர்ந்த கலைமதிக்கும் 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு  காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்த நிலையில் உறவினர் வீட்டுக்கு சென்ற சதீஷ்குமாரை வழியில் சந்தித்த மனைவி கலைமதி மற்றும் மாமனார் நாகராஜ் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்பு கணவரை கலைமதி கல்லால் தாக்க, மாமனார் நாகராஜ் கத்தியால் குத்தியுள்ளார். இதில், சதீஷ்குமார் உயிரிழந்தார். இது தொடர்பாக கலைமதி மற்றும் அவரது தந்தை நாகராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்