"தேர்தல் நன்னடத்தை விதிகள் தமிழகத்தில் 27ந் தேதி வரை அமலில் இருக்கும்" - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழகம் முழுவதும், வருகின்ற 27ஆம் தேதி வரை தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் நன்னடத்தை விதிகள் தமிழகத்தில் 27ந் தேதி வரை அமலில் இருக்கும் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
x
தமிழகத்தில் 38 நாடாளுமன்ற  தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை முன்னிட்டு,  மார்ச் 10ஆம் தேதி முதல்  தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளதை சுட்டிக்காட்டி உள்ள இந்திய தேர்தல் ஆணையம், 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றிற்குரிய வாக்குப்பதிவு கடந்த மாதம் 18ஆம் தேதி முடிவுற்றது என தெரிவித்துள்ளது. மேலும் 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி  நடைபெற உள்ளது  என்றும், தேர்தல் நன்னடத்தை விதிகள் 27ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்