"அரசின் கவர்ச்சி திட்டங்களில் தங்களுக்கு உடன்பாடு கிடையாது" - பிரேமலதா விஜயகாந்த்

தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்சினை நிலவுவதால் வரும் 19 ஆம் தேதிக்கு பிறகு தமிழக அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
x
தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்சினை நிலவுவதால் வரும் 19 ஆம் தேதிக்கு பிறகு, தமிழக அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். சென்னை சாலிகிராமத்தில் தே.மு.தி.க. சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த அவர், பொது மக்களுக்கு இளநீர் , தர்பூசணி, மோர் உள்ளிட்டவற்றை வழங்கினார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய பிரேமலதா தமிழக அரசு செயல்படுத்தக் கூடிய கவர்ச்சி திட்டங்களில் தங்களுக்கு உடன்பாடு கிடையாது என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்