"வாக்கு எண்ணிக்கையை முறையாக மேற்கொள்ள வேண்டும்" - தேர்தல் நுண்பார்வையாளர், கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தல்

மயிலாடுதுறை மக்களவை தொகுதி வாக்கு இயந்திரங்கள் மன்னம்பந்தல் ஏ.வி.சி. தனியார் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கையை முறையாக மேற்கொள்ள வேண்டும் - தேர்தல் நுண்பார்வையாளர், கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தல்
x
மயிலாடுதுறை மக்களவை தொகுதி வாக்கு இயந்திரங்கள் மன்னம்பந்தல் ஏ.வி.சி. தனியார் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணும் மைய நுண்பார்வையாளர் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் இன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மயிலாடுதுறை மக்களவை தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் விஜய்குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கையை முறையாக கையாளுதல், தேர்தல் விதி முறைகளை அதிகாரிகள் சரியாக பின்பற்றவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்