ஆசிய தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

"நம்பிக்கை கொண்டால் அனைத்து தடைகளையும் வெல்ல முடியும்"
ஆசிய தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
x
இந்திய மாலுமிகள் நல அமைப்பு சார்பாக ஆசிய தடகள போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனை கோமதி மாரிமுத்து மற்றும் பல திறமைசாலிகளை கௌரவப்படுத்தும் விதமாக பாராட்டு விழா நடைபெற்றது. சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஒடிசா மாநில முன்னாள் ஆளுநர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், ஒருவர் தன்மீது நம்பிக்கை கொண்டால் அனைத்து தடைகளையும் வெல்ல முடியும் என்பதற்கு வீராங்கனை கோமதி மாரிமுத்து உதாரணமாக உள்ளாதாக புகழாரம் சூட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்