தனியார் தொல்லியல் ஆய்வு கழகம் சார்பில் மரபு நடை - மாணவர்கள் பங்கேற்பு

தமிழர்களின் பாரம்பரிய வரலாற்று சின்னங்களையும் மரபுகளையும் எடுத்துக்கூறும் வகையில் புதுக்கோட்டையில் நடைபெற்ற மரபு நடையில் வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
தனியார் தொல்லியல் ஆய்வு கழகம் சார்பில் மரபு நடை - மாணவர்கள் பங்கேற்பு
x
வளரும் தலைமுறையினருக்கு தமிழர்களின் பாரம்பரிய வரலாற்று சின்னங்களையும், மரபுகளையும் எடுத்துக்கூறும் வகையில் புதுக்கோட்டையில் நடைபெற்ற மரபு நடையில் வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.புதுக்கோட்டை தனியார் தொல்லியல் ஆய்வுக் கழகம் சார்பில் நடைபெற்ற மரபு நடையில், பொற்பனைக்கோட்டை திருக்கட்டளை  பூலாங்குறிச்சி  ஏனாதி, கொடும்பாளூர் குடுமியான்மலை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த இடங்களுக்கு வரலாற்று ஆர்வலர்கள் பயணம் மேற்கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்