சென்னை : ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியின் வீட்டில் கொள்ளை

சென்னை கொரட்டூர் அடுத்த கோல்டன் காலனியில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி லீலா நாயரின் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை மற்றும் 5 ஆயிரம் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியின் வீட்டில் கொள்ளை
x
சென்னை கொரட்டூர் அடுத்த கோல்டன் காலனியில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி லீலா நாயரின் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை மற்றும் 5 ஆயிரம் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சென்னை மத்திய தீர்ப்பாயத்தில் உறுப்பினராக உள்ள லீலா நாயர், தனியாக வசித்து வருகிறார். இரவு வீட்டின் கதவை பூட்டி விட்டு மேல் அறையில் படுக்க சென்ற லீலா நாயர், காலையில் பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டு பணம், நகை கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்