கடையில் கைவரிசை - மர்மநபருக்கு வலை
சென்னை அயனாவரத்தில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து 10 ஆயிரம் ரொக்கம் செல்போன்களை கொள்ளையடித்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தட்சணாமூர்த்தி என்பவருக்கு சொந்தமான கடையில் நுழைந்த மர்மநபர் செல்போன்கள் குழந்தைகள் விளையாடும் ரிமோட் கார் ஆகியவற்றை நேற்றிரவு கொள்ளை அடித்துவிட்டு தப்பிச் சென்றார். இதைக் கண்ட ஆட்டோ ஓட்டுனர் டேனியல் உடனடியாக அயனாவரம் போலீசில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story