சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே முறையாக குடிநீர் வழங்கவில்லை என்று கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
x
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே முறையாக குடிநீர் வழங்கவில்லை என்று கூறி  நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். பி.என்.பட்டி பேரூராட்சியைக் கண்டித்து, தங்கமபுரி பட்டினத்தில் மறியலில் ஈடுபட்ட பெரியார் நகரை சேர்ந்த பெண்கள், பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர். இந்த மறியல் காரணமாக சேலம்-மேட்டூர் சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.தகவல் அறிந்து வந்த கருமலைக் கூடல் போலீசார் நடத்திய சமாதான பேச்சுவார்த்தைக்கு பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்