16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : இளைஞர்கள் 2 பேர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : இளைஞர்கள் 2 பேர் கைது
x
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ஆரணியை அடுத்த வி.வி.தாங்கல் கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு அதே கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞர் பாலியல் தொந்தரவு கொடுத்த‌தாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் கண்ணாமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். விசாரணையில் சதீஷ்குமார் பாலியல் தொந்தரவு கொடுத்த‌து உறுதி செய்யப்பட்டதால், அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவருக்கு உதவியதாக சதீஷ்குமாரின் நண்பர் ராஜேஷ்குமாரையும் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்