நள்ளிரவில் ஓட்டலில் உணவு கேட்டு தகராறு - வெளியான சிசிடிவி கேமரா காட்சிகள்

சென்னை மதுராந்தகம் அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஒட்டல் ஒன்று அமைந்துள்ளது.
நள்ளிரவில் ஓட்டலில் உணவு கேட்டு தகராறு - வெளியான சிசிடிவி கேமரா காட்சிகள்
x
இங்கு நேற்று இரவு 12 மணிக்கு கடை மூடப்பட்ட நிலையில், அங்கு மதுபோதையில் வந்த 5 இளைஞர்கள், உணவு கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது உணவு இல்லை என்று கூறிய ஓட்டல் மேலாளர் ஆனந்தனை தாக்கிய அவர்கள், ஓட்டலுக்குள் புகுந்து, கல்லாவில் இருந்த பணத்தை எடுக்க முயற்சித்துள்ளனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆனந்தன் கூச்சலிட்டவுடன் அந்த 5 இளைஞர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் ஆனந்தன் அளித்த புகாரின் அடிப்படையில் அங்கு உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து 5 பேரை யும் போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த சிசிடிவி கேமரா காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்