சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா : குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த தமிழக ஆளுநர்

சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழாவையொட்டி பஞ்ச ரத்ன கீர்த்தனை இசை நிகழ்ச்சி திருவாரூரில் நடைபெற்றது.
சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழா : குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த தமிழக ஆளுநர்
x
சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழாவையொட்டி பஞ்ச ரத்ன கீர்த்தனை இசை நிகழ்ச்சி திருவாரூரில்  நடைபெற்றது.தியாகராஜர் திருக்கோவிலில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.திருவாரூரில் பிறந்த கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான ஸ்ரீ தியாக பிரம்மம்,  ஸ்ரீ முத்துசாமி தீட்சிதர் , ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள் ஆகியோரின் ஜெயந்தி நிகழ்ச்சி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான இசை அஞ்சலி நிகழ்ச்சி கடந்த 6 ஆம் தேதி தொடங்கிய நிலையில், இறுதி நிகழ்ச்சியாக பஞ்ச ரத்ன கீர்த்தனை இசைக்கும் நிகழ்வு தியாகராஜர் திருக்கோவிலில் நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் பஞ்ச ரத்ன கீர்த்தனை இசைத்து அஞ்சலி செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்