வறட்சியின் பிடியில் திருப்பரங்குன்றம், கூடல் மலை பகுதி : குடிநீர் இன்றி தவிக்கும் பொதுமக்கள்

திருப்பரங்குன்றம் தொகுதிக்கு காவிரி கூட்டு நீர் திட்டம் மூலம் தண்ணீர் கொண்டு வர வேண்டும் என அத்தொகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
x
திருப்பரங்குன்றம் கூடல் மலை உள்ளிட்ட பகுதிகளில் 4 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். நீர்தேக்க தொட்டி பழுதடைந்து இடியும் நிலையில் உள்ளதாகவும், அதனை சரி செய்து சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். குடிநீர் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு வேட்பாளர்கள் தேர்தல் அறிக்கையில் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொள்கின்றனர். 




Next Story

மேலும் செய்திகள்