பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - தலைமறைவான தொழிலதிபர் அதிரடியாக கைது

பாதுகாப்பிற்காக பக்கத்து வீட்டில் விட்டுச் சென்ற பள்ளி மாணவிக்கு, அந்த வீட்டின் உரிமையாளர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - தலைமறைவான தொழிலதிபர் அதிரடியாக கைது
x
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் ராமன்துறையைச் சேர்ந்தவர், ரெபின். தொழிலதிபரான இவருக்கும், இவரது வீட்டின் அருகே வசிக்கும் ஒரு பெண்ணுக்கும் தவறான உறவு இருந்ததாக கூறப்படுகிறது. வெளியில் வேலைக்கு செல்லும் போது, பள்ளியில் படிக்கும் தனது மகளை, பாதுகாப்பிற்காக ரெபின் வீட்டில், விட்டுச் செல்வதை அந்த பெண் வழக்கமாக வைத்துள்ளார். அப்படி ஒருநாள் விட்டுச்செல்லும் போது, பள்ளி மாணவியிடம் ரெபின் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது பற்றி தனது தாயிடம் பள்ளி மாணவி சொல்ல, அவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து தலைமறைவான ரெபினை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். தாயின் தவறான உறவால், மகள் பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்