ஆர்.எஸ்.பாரதி மனைவியிடம் தங்க சங்கிலி பறிக்க முயற்சி - பைக்கில் வந்த 2 இளைஞர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் மனைவியிடம் தங்க சங்கிலியை, திருடர்கள் பறிக்க முயன்ற சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.எஸ்.பாரதி மனைவியிடம் தங்க சங்கிலி பறிக்க முயற்சி - பைக்கில் வந்த 2 இளைஞர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் மனைவியிடம் தங்க சங்கிலியை, திருடர்கள் பறிக்க முயன்ற சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டின் அருகே, ஆர்.எஸ்.பாரதியின் மனைவி டாக்டர் சம்பூரணம் நடந்து சென்றுள்ளார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 இளைஞர்கள், டாக்டர் சம்பூரணம் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். உடனே சுதாரித்த அவர், தங்க சங்கிலியை பறிக்கவிடாமல் சத்தம் போட்டுள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால், திருடர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்