வேலூரில் தொகுதிக்கு தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையத்திடம் இருந்த எந்த தகவலும் வரவில்லை - சத்யபிரதா சாஹூ

வேலூரில் தொகுதிக்கு தேர்தல் நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் இருந்த எந்த தகவலும் வரவில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
வேலூரில் தொகுதிக்கு தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையத்திடம் இருந்த எந்த தகவலும் வரவில்லை - சத்யபிரதா சாஹூ
x
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்திய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறினார். வாக்கு எண்ணிக்கையின் போது, தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் மறு வாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளதாகவும் சத்யபிரத சாஹூ கூறினார். வாக்கு எண்ணிக்கைக்கு கூடுதலாக 3 கம்பெனி துணை ராணுவப்படை கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்