விருத்தாசலம் கல்லூரி மாணவி கொலை வழக்கு - மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஆகாஷின் தந்தை மனு
விருத்தாசலம் கல்லூரி மாணவி கொலை வழக்கில் தங்களது மகன் ஆகாஷ் கொலை செய்யவில்லை என அவரது தந்தை அன்பழகன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார்.
ஆகாஷின் தந்தை அளித்துள்ள மனுவில் தமது மகனும், கொலை செய்யப்பட்ட பெண்ணும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும் இருவரும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறியுள்ளார். எனவே தமது மகன் ஆகாஷ் அப்பாவி என்றும் அவன் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பெண்ணின் தாய், தந்தை மற்றும் உறவினர்கள் யாரேனும் கொலை செய்திருக்கலாம் என்றும் எனவே போலீசார் தீர விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஆகாஷின் தந்தை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
Next Story