3% அகவிலைப்படியை வரும் 19 ஆம் தேதிக்குள் வழங்கக் கோரி அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டம்

மூன்று சதவீத அகவிலைப்படியை வரும் 19 ஆம் தேதிக்குள் வழங்கக் கோரி அரசு ஊழியர் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
3% அகவிலைப்படியை வரும் 19 ஆம் தேதிக்குள் வழங்கக் கோரி அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டம்
x
சென்னை நுங்கம்பாக்கம் வணிகவரி அலுவலக வளாகத்தில், அரசு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் அன்பரசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அன்பரசு, சம்பள உயர்வு நிலுவை தொகையை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட அதிகாரிகள் வாங்கி விட்டதாகவும் அவர்களுக்கு கீழ் வேலை பார்க்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நிலுவைத் தொகையை ஏன் இன்னும் வழங்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வரும் என தெரிந்து முன்கூட்டியே மத்திய அரசு செயல்பட்டபோது போல தமிழக அரசு ஏன் செயல்படவில்லை என்றும் அன்பர சுகேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்