ஸ்டெர்லைட் விவகாரம் - பேரணி பொதுக்கூட்டத்திற்கு அனுமதிக்க வேண்டுகோள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஸ்டெர்லைட் விவகாரம் - பேரணி பொதுக்கூட்டத்திற்கு அனுமதிக்க வேண்டுகோள்
x
தற்போது தேர்தல் நடைமுறை அமலில் உள்ளதால், நினைவு நாளான மே 22 ஆம் தேதிக்கு பதில் மாற்று தேதி வழங்கினாலும் ஏற்க தயார் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அந்த அமைப்பினர், மே 22 ஆம் தேதியை உலக தமிழர்களின் துக்க நாளாக கடைபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்