கேஸ் சிலிண்டரில் தங்கம் கடத்தல் - ரூ. 19 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கேஸ் சிலிண்டரில் மறைத்து கடத்தப்பட்ட 19 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் பயணிகளின் உடமைகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது கேஸ் சிலிண்டரில் சுமார் 19 லட்சம் ரூபாய் மதிப்பிலான 580 கிராம் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்ட்டது. இதனையடுத்து அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், திருவாடனையை சேர்ந்த சக்கரவர்த்தி என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story