கோவில்களில் பிரம்மோற்சவம் தொடக்கம்
கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பாணபுரீஸ்வரர் கோவிலில், 50 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பாணபுரீஸ்வரர் கோவிலில், 50 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோவில் கொடிமரத்திற்கு மஞ்சள், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.இதேபோல, திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோவிலில் 69 ஆண்டுகளுக்கு பிறகு வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும், நவகிரக கோவில்களில், 8வது கிரகமான ராகு பகவானை போற்றும் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில், நாகநாதசுவாமி கொடிமரத்திற்கு அருகில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
Next Story