குடும்ப தகராறில் குழந்தைக்கு விஷம் கொடுத்த தாய்
குடும்ப தகராறில் பெற்ற குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் பகுதியில் வசிக்கும் தம்பதி தமிழ்ச்செல்வன் - கயல்விழிக்கு 3 வயதில் சிவதாரணி என்ற குழந்தை உள்ளது.குழந்தையை பள்ளியில் சேர்ப்பது தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதில் விரக்தியடைந்த கயல்விழி பாலில் விஷம் கலந்து குழந்தைக்கு கொடுத்துவிட்டு தானும் குடித்துள்ளார். இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்தது. கயல்விழிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.பெற்ற குழந்தைக்கு தாயே விஷம் கொடுத்து கொன்று, தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story