குரங்கு கடித்து மூதாட்டி காயம்

மூதாட்டி நாகாயாள் என்பவரை, குரங்கு ஒன்று கடித்ததில் அவரது தலை மற்றும் முகத்தில் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
குரங்கு கடித்து மூதாட்டி காயம்
x
சிதம்பரம் மாவட்டம் வடக்குமாங்குடி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி நாகாயாள் என்பவரை, குரங்கு ஒன்று கடித்ததில் அவரது தலை மற்றும் முகத்தில் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குரங்கு கூட்டம் கிராமத்தில் இருக்கும் வீடுகளில் அவ்வப்போது புகுந்து பொருட்களை நாசம் செய்வதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கிராமத்தில் சுற்றி திரியும் குரங்குகளை பிடித்து காட்டுப் பகுதியில் விட வேண்டும் என வனத்துறைக்கு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தும், வனத்துறை அதற்கான முயற்சிகளில் ஈடுபடாமல் அலட்சியப்படுத்துவதாக வடக்குமாங்குடி கிராம மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்