சொந்த செலவில் தடுப்பணைகள் கட்டிய கிராம மக்கள்

கீரமங்கலத்தில் நிலத்தடி நீரை பாதுகாக்க சொந்த செலவில் குளங்களை தூர்வாரும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
சொந்த செலவில் தடுப்பணைகள் கட்டிய கிராம மக்கள்
x
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே செல்லும் அம்புலி ஆறு, கடந்த 2017ம் ஆண்டு வறண்டு போனதால் அப்பகுதி இளைஞர்கள் மற்றும்விவசாயிகள் ஒன்றிணைந்து சொந்த செலவில் தடுப்பணைகள் கட்டி உள்ளனர்.இதன்மூலம், கல்லாகுளம் மற்றும் கடியாகுளம் குளங்களுக்கு தண்ணீர் செல்ல வழி செய்தனர்.தற்போது குளங்கள் தூர்ந்து விட்டதால் தூர்வாரும் பணியை மீண்டும் தொடங்கியுள்ளனர். காட்டாறுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு உதவி செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்