திருடப்பட்ட 102 செல்போன்கள் பறிமுதல் : செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

சென்னை திருவல்லிக்கேணி பகுதிகளில் காணாமல் போன மற்றும் வழிப்பறி செய்யப்பட்ட 102 செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருடப்பட்ட 102 செல்போன்கள் பறிமுதல் : செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
x
திருவல்லிக்கேணி, எழும்பூர் நுங்கம்பாக்கம், அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் செல்போன்கள் வழிப்பறி செய்யப்பட்டதாக புகார்கள் குவிந்தன.இந்நிலையில்,  சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் செல்போனின் ஐ.எம்.இ.ஐ நம்பரை வைத்து கண்டுபிடித்த போலீசார்,  அதனை சம்பந்தபட்டவர்களிடம் ஒப்படைத்தனர்.இந்த நிகழ்ச்சியில் பேசிய துணை ஆணையர், வழிபறியில் செல்போன்களை பறிகொடுத்தவர்கள்  பைக் பதிவு எண் மற்றும் திருடர்களின் அங்க அடையாளங்களை உடனடியாக அருகாமையில் உள்ள காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என கேட்டுகொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்