நீலகிரி : நள்ளிரவில் டாஸ்மாக் கடையில் புகுந்த திருடர்கள் - 2 பேர் கைது

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கடை வீதி பகுதியில் உள்ள மதுபான கடையில் இருந்து பணம் மற்றும் மதுபாட்டில்கள் திருடப்பட்டுள்ளதாக கடையின் மேலாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
நீலகிரி : நள்ளிரவில் டாஸ்மாக் கடையில் புகுந்த திருடர்கள் - 2 பேர் கைது
x
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கடை வீதி பகுதியில் உள்ள மதுபான கடையில் இருந்து பணம் மற்றும் மதுபாட்டில்கள் திருடப்பட்டுள்ளதாக கடையின் மேலாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து கடையில் இருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை போலீசார் ஆராய்ந்தனர். அதில் நள்ளிரவில் கடையின் உள்ளே இரண்டு பேர் புகுந்து பணம் மற்றும் மதுபாட்டில்களை திருடி செல்வது பதிவாகி இருந்தது. இதனையடுத்து அவ்விருவரின் புகைப்படத்தை வைத்து அப்பகுதியில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் கோபிநாத், ராஜா ஆகியோர் டாஸ்மாக் கடையில் புகுந்து திருடியதை ஒப்புக்கொண்டதை அடுத்து போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்