3 மயில்கள் உயிரிழப்பு - வனத்துறை அதிகாரிகள் விசாரணை
சிவகங்கை அருகே மேலவாணியங்குடி பெரியகண்மாயில் 3 மயில்கள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது
சிவகங்கை அருகே மேலவாணியங்குடி பெரியகண்மாயில் 3 மயில்கள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறை அதிகாரிகள், உயிரிழந்த ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் மயில்களை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக சிவகங்கை கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோடை வெய்யிலில் தண்ணீர் கிடைக்காமல் இறந்தனவா? அல்லது விஷ உணவை உட்கொண்டதால் இறந்தனவா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story