பாதாள சாக்கடை திட்டத்தில் பிரச்சினை - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை திட்டத்தில் தொடரும் பிரச்சினைகளால் பேருந்து நிலையத்தில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
பாதாள சாக்கடை திட்டத்தில் பிரச்சினை - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் செயல்படுத்தப்படும் பாதாள சாக்கடைத் திட்டத்தில், அண்மைக் காலமாக பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.  பல்வேறு இடங்களில்  சாக்கடை கழிவு வெளியேறி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதுடன், பழைய பேருந்து நிலையத்தின் மழைநீர் வடிகாலில்  மனிதக் கழிவுகள் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன், ஆட்டோ ஓட்டுநர்கள், வர்த்தகர்கள் பயணிகளுக்கும் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்