அரவக்குறிச்சி தொகுதியில் புதிய தொழிற்சாலை - செந்தில் பாலாஜி வாக்குறுதி

மலைக்கோவிலூரில் புதிய தொழிற்சாலை அமைக்கப்படும் என தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
அரவக்குறிச்சி தொகுதியில் புதிய தொழிற்சாலை - செந்தில் பாலாஜி வாக்குறுதி
x
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் செந்தில்பாலாஜி, அரவக்குறிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட வெஞ்சமாங் கூடலூர், பாரப்பட்டி, நந்தனூர், மாமரத்துபட்டி நடுபாளையம  ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.அப்போது பேசிய செந்தில் பாலாஜி, அரவக்குறிச்சி தொகுதி முழுவதும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும்,  அரசு கலைக் கல்லூரி அரவக்குறிச்சி ஒன்றியத்தில் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார். இதேபோன்று, மலைக் கோவிலூரில் பல ஆண்டுகளாக மூடப்பட்டு இருக்கும் நூற்பாலை பகுதியில்,  55 ஏக்கர் நிலத்தில் புதிய தொழிற்சாலை தொடங்கப்படும் என்றும் செந்தில் பாலாஜி வாக்குறுதி அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்