அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட தங்கும் விடுதிகள் : பூட்டி சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவு - சீசன் நேரத்தில் சீல் அகற்றிய விடுதி உரிமையாளர்கள்

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில், கொடைக்கானலில் பூட்டி சீல் வைக்கப்பட்ட தங்கும் விடுதிகள் சட்டவிரோதமாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால், நகராட்சி அதிகாரிகள் அந்த விடுதிகளை மீண்டும் பூட்டி சீல் வைத்தனர்.
அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட தங்கும் விடுதிகள் : பூட்டி சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவு - சீசன் நேரத்தில் சீல் அகற்றிய விடுதி உரிமையாளர்கள்
x
கொடைக்கானல் நகரில் உரிய அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட 286 கட்டிடங்களை பூட்டி சீல் வைக்க  மதுரை உயர்நீதிமன்ற கிளை 2 மாதங்களுக்கு முன் உத்தரவிட்டது.  இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பல விடுதிகளில் சீல் அகற்றப்பட்டு அறைகள் வாடகைக்கு வழங்கப்படுவதாக தெரிகிறது. இது தொடர்பான தகவல்களின் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட நகராட்சி அதிகாரிகள், அப்படி செயல்பட்ட விடுதிகளின் அறைகளை பூட்டி சீல் வைத்ததுடன் மின் இணைப்பு, குடிநீர் இணைப்புகளையும் துண்டித்தனர். நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டவர்கள் மீது நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்கப்படும் என்றும் கூறினர். சீசன் நேரத்தில் விடுதிகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கைகளால் கொடைக்கானலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்