விவசாயிகள் சந்தைப்படுத்தல் ஊக்குவிக்கும் மாநாடு : டேனிஷ்பேட்டையில் ரயில்கள் நின்று செல்லும் - சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு

விவசாயிகள் மாநாடு நடப்பதை தொடர்ந்து ஓமலுர் அருகே டேனிஷ்பேட்டை ரயில் நிலையத்தில் மே 15, 16, 19 ஆகிய தேதிகளில் ஏற்காடு எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
விவசாயிகள் சந்தைப்படுத்தல் ஊக்குவிக்கும் மாநாடு : டேனிஷ்பேட்டையில் ரயில்கள் நின்று செல்லும் - சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு
x
சேலம் மாவட்டம் ஓமலுர் அருகே டேனிஷ்பேட்டை கிராமத்தில் அடுத்த மாதம் 15 ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் விவசாயிகள் சந்தைப்படுத்தல் ஊக்குவிக்கும் மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டிற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் வந்து செல்ல வசதியாக டேனிஷ்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஏற்காடு எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ், வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் அந்த நாட்களில் நின்று செல்லும் என சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்