ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தப்பட்டு சிறுவன் கொலை : கணவனுக்கு ஆயுள், மனைவிக்கு 7 ஆண்டு சிறை
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த 15 வயது சிறுவனை, அவனது வீட்டின் மாடியில் வசித்து வந்த ஜவஹர்பாபு என்பவர் அடித்து மயக்கமடைய செய்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த 15 வயது சிறுவனை, அவனது வீட்டின் மாடியில் வசித்து வந்த ஜவஹர்பாபு என்பவர் அடித்து மயக்கமடைய செய்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்த சிறுவனை, ஜவஹர்பாபு தனது மனைவியுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு கடலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுவனை கொலை செய்த ஜவஹர்பாபுவிற்கு கடுங்காவலுடன் கூடிய ஆயுள் தண்டனையும் 85 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி ஆரவள்ளிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
Next Story