குறிப்பிட்ட ஒரு சமுதாய பெண்கள் குறித்து அவதூறு : மர்மநபர்களை கைது செய்ய கோரி சாலை மறியல்

மதுரை மேலூர் அருகே குறிப்பிட்ட ஓர் சமுதாய பெண்கள் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு செய்திகளை பரப்பிய மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி அந்த சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குறிப்பிட்ட ஒரு சமுதாய பெண்கள் குறித்து அவதூறு : மர்மநபர்களை கைது செய்ய கோரி சாலை மறியல்
x
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதிகளில் குறிப்பிட்ட ஓர் சமுதாய பெண்களை இழிவுபடுத்தி சமூக வலைதளத்தில் அவதூறு செய்திகளை வெளியிட்ட நபர்களை கைது செய்ய கோரி மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள அந்த சமூதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர்  மதுரை - சென்னை நான்கு வழிச்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால் கூட்டத்தை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. பதிலுக்கு போராட்டக்காரர்கள் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதில் ஒரு காவலர் காயமடைந்தார். பரபரப்பான சூழலை அடுத்து அங்கு வந்த மதுரை சரக டி.ஐ.ஜி பிரதிப்குமார் மற்றும் மதுரை எஸ்.பி மணிவண்ணன் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்