4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் இணைஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வரும் மே ஒன்றாம் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
x
4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வரும் மே ஒன்றாம் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அன்றைய தினம் சூலூர் தொகுதியிலும், மே 5-ந்தேதி  அரவக்குறிச்சி தொகுதியிலும் மே 6-ந்தேதி திருப்பரங்குன்றம் தொகுதியிலும் முதலமைச்சர் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதேபோல் மே 7-ந்தேதி ஒட்டப்பிடாரம் தொகுதியிலும், 11-ந்தேதி திருப்பரங்குன்றம் தொகுதியிலும், மே 12-ந்தேதி ஒட்டப்பிடாரம் தொகுதியிலும் முதலமைச்சர் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். மே 13-ந்தேதி அரவக்குறிச்சி தொகுதியிலும் 14-ந்தேதி மீண்டும் சூலூர் தொகுதியிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்