வரும் 26, 27 தேதிகளில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

வரும் 26, 27 ஆகிய தேதிகளில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு அறிவித்துள்ளது.
வரும் 26, 27 தேதிகளில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்
x
தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சிவசுப்ரமணியன் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசும் போது, 
கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நீதிபதிகள் நியமனம் செய்யாமல் காலதாமதம் செய்வதை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.  மேலும், தமிழக அரசு நீதிமன்ற கட்டணத்தை மீண்டும் குறைக்க வேண்டும் என்றும் இந்த போராட்டத்தின் போது வலியுறுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்