மின்சாரம் தாக்கி உயிரிழந்த யானை...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த யானை, கழுகுக்காக வீசப்பட்ட சம்பவம் பொதுமக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த யானை...
x
நெல்லித்துறை காப்புக்காடு பகுதியில், உணவு தேடி நுழைந்த யானை, பாக்கு மரத்தை முறிக்கும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. வனத்துறை, மின்வாரிய அதிகாரிகள் மத்தியில் யானைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உயிரிழக்கும் யானைகளை அந்தந்த பகுதியிலேயே புதைப்பது வழக்கம்.  ஆனால், இந்த யானையை லாரியில் ஏற்றிய வனத்துறையினர், வனப்பகுதியில் வீசினர். அழிந்து வரும் காரு இன கழுகு மற்றும் வனவிலங்குகளின் உணவுக்காக போடப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இறந்த யானை ஒன்று, இதுபோல் வீசப்படுவது முதன்முறை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். முன்னதாக யானையின் தந்தங்கள் எடுக்கப்பட்டதால், யானை இறந்து கிடந்த இடம் ரத்தத்தில் நனைந்து காணப்பட்டது பார்ப்போரின் நெஞ்சை உறைய வைக்கும் விதமாக இருந்தது. 

Next Story

மேலும் செய்திகள்